Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக பழனிசாமி மான நஷ்ட ஈடு வழக்கு

ஆகஸ்டு 02, 2022 07:21

சென்னை: எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளருமான பழனிசாமி, அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரியும், உண்மைக்கு புறம்பாக தகவல்களை பரப்பியதற்கு ரூ.1.10 கோடி மான  நஷ்ட ஈடு கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது. 

பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, வழக்கை ஆக.,11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தலைப்புச்செய்திகள்